/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
11,000 இயந்திர குழிகளில் துார்வாரும் பணி நிறைவு
/
11,000 இயந்திர குழிகளில் துார்வாரும் பணி நிறைவு
ADDED : செப் 23, 2024 02:31 AM

அண்ணா நகர்:பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணா நகர் மண்டலத்தில், 11,000 பாதாள சாக்கடை இயந்திர குழிகளில், துார்வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து துறைகளும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை குடிநீர் வாரியத்தில் அண்ணா நகர் மண்டலத்தில், 94 - 108 வார்டுகள் உள்ளன.
இங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் உந்து நிலையங்களில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மண்டலத்திற்கு உட்பட 11,000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இயந்திர குழிகளில், துார்வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. இப்பணிகளை அண்ணா நகரில், கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், பகுதி மற்றும் துணை பொறியாளர் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அண்ணா நகர் மண்டலத்தில், 11,000துக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இயந்திர குழிகளில் துார்வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. தொடர்ந்து, வடிகால்களை கண்காணித்தும் வருகிறோம். மழைக்காலத்தில் தேவையான மேட்டார்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவை தடையின்றி செயல்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.