sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

/

இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு


ADDED : ஜூலை 09, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் ஜூலை, 2 முதல், 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. பணியிட மாறுதல் கோரி 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2025 ஜூன், 30 நிலவரப்படி காலி பணியிடங்களை கல்வி மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, கரூர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகேசன் தலைமையில், மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 32 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 18 பேர் கலந்தாய்வுக்கு வந்திருந்தனர். அவர்கள் யாரும் இடமாறுதல் பெறவில்லை. விண்ணப்பித்தவர்களில், 14 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.






      Dinamalar
      Follow us