sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செக் மோசடி வழக்கு ஒப்பந்ததாரர் கைது

/

செக் மோசடி வழக்கு ஒப்பந்ததாரர் கைது

செக் மோசடி வழக்கு ஒப்பந்ததாரர் கைது

செக் மோசடி வழக்கு ஒப்பந்ததாரர் கைது


ADDED : ஏப் 08, 2025 02:17 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், மணலி, சின்னசேக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 45. கட்டட ஒப்பந்ததாரர். தாம்பரம் சானடோரியத்தை சேர்ந்தவர் விமல், 45. ஜல்லி, கருங்கல் ஜல்லி சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

தனது வேலைக்கு ஜல்லி, கருங்கல் ஜல்லி சப்ளை செய்யுமாறும், பின்னர் பணம் கொடுப்பதாகவும் பிரபாகரன் கேட்டுக்கொண்டதன்பேரில், விமல் பொருட்களை சப்ளை செய்தார்.

அதற்கு, 8 லட்சம் ரூபாய்க்கு எச்.டி.எப்.சி., வங்கி காசோலையை பிரபாகரன் கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என்று வந்தது.

இது குறித்து பிரபாகரனிடம் கேட்டபோது, விமலை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காசோலை மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி செய்ததாக, உயர் நீதிமன்றத்தில் விமல் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பிரபாகரனை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us