/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அயோத்தியில் மஹா சாம்ராஜ்ய பட்டாபிஷேக பாராயணம்
/
அயோத்தியில் மஹா சாம்ராஜ்ய பட்டாபிஷேக பாராயணம்
ADDED : ஜூலை 19, 2025 11:13 PM
சென்னை:ஸ்ரீப்ரேமாஞ்சலி டிரஸ்டின் எட்டாம் ஆண்டு மேளா, ஸ்ரீமத் ராமாயண மஹாசாம்ராஜ்ய பட்டாபிஷேகம், ஸ்ரீ ராகவோத்ஸவம் ஆகியவை இம்மாதம், 12ம் தேதி துவங்கி, இன்று வரை, ஸ்ரீராதாமோஹன் குஞ்ஜ், ராணிபஜார் காலனி, ஜானகி காட், அயோத்தியில் நடக்கிறது.
வால்மீகி ராமாயண பாராயணம், பஜனை, கிருஷ்ண பிரேமியின் சீடர் சுபத்ராவின் ராகவ சதகம் உபன்யாசம் முதலிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்து வருகின்றன. 125 பேர் ராமாயண பாராயணம் செய்வது, மஹாசாம்ராஜ்ய பட்டாபிஷேகத்தை, 150 பெண்கள் இணைந்து, அயோத்தியில் பாராயணம் செய்வது இதுவே முதல்முறை. இங்கு பங்கேற்க முடியாத பக்தர்களுக்காக ஸ்ரீப்ரேமாஞ்சலி, 'யு- டியூப்' இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.