/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்பந்து விளையாடிய மாநகராட்சி ஊழியர் பலி
/
கால்பந்து விளையாடிய மாநகராட்சி ஊழியர் பலி
ADDED : ஏப் 06, 2025 07:52 PM
புளியந்தோப்பு:கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ராஜன், 55; சென்னை மாநகராட்சி ஊழியர். இவர், நேற்று காலை 6:00 மணியளவில், திரு.வி.க., நகர், பல்லவன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், நண்பர்களுடன் கால்பந்து விளையாடியுள்ளார்.
விளையாடி முடித்து, காலை 8:30 மணியளவில் மைதானத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென மயங்கி சரிந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சென்ற புளியந்தோப்பு போலீசார், ராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

