sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலை பணிக்கு ரூ.140 கோடி கோரும் மாநகராட்சி

/

சாலை பணிக்கு ரூ.140 கோடி கோரும் மாநகராட்சி

சாலை பணிக்கு ரூ.140 கோடி கோரும் மாநகராட்சி

சாலை பணிக்கு ரூ.140 கோடி கோரும் மாநகராட்சி


ADDED : ஜன 16, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 16, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, 140 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இம்மாநகராட்சியில், முக்கிய மற்றும் உட்புற சாலைகள் என, 7,000த்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இதில், ஏகப்பட்ட சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணியால், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை பகுதிகளில், பல சாலைகள் சீர்குலைந்து விட்டன. அந்த வகையில், ஐந்து மண்டலங்களிலும், 800க்கும் மேற்பட்ட சாலைகள் சீர்குலைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் நாள்தோறும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த சாலைகளை சீரமைக்க, மாநகராட்சியில் போதிய நிதி இல்லாததால், 140 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us