sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி அதிகாரி மீது முறைகேடு புகார்

/

மாநகராட்சி அதிகாரி மீது முறைகேடு புகார்

மாநகராட்சி அதிகாரி மீது முறைகேடு புகார்

மாநகராட்சி அதிகாரி மீது முறைகேடு புகார்


ADDED : ஜன 07, 2025 12:33 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூரில், கோழி, ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் சரத்ராஜன். இவர், நேற்று மாலை, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் பற்றி சரத்ராஜன் கூறியதாவது:

நான், கடந்த ஐந்து ஆண்டுகளாக எர்ணாவூரில் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த, டிச., 21ம் தேதி, மாநகராட்சி உரிமம் ஆய்வாளர் வீரமுனிநாதன் என்பவர், கடை உரிமம் காலாவதியாகி விட்டதாக கூறினார்.

இதையடுத்து, டிச., 30ம் தேதி, கோழி இறைச்சி விற்பனைக்கு, 6,000 ரூபாய், ஆட்டிறைச்சிக்கு 6,000 ரூபாய், தவிர, 1,000 ரூபாய் என, 13,000 ரூபாயை அவருடைய 'ஜிபே' கணக்கிற்கு அனுப்பினேன்.

பின், என் கடை உரிமம் மார்ச், 31 வரை இருப்பது தெரிய வந்த நிலையில், வருவாய் பிரிவு அதிகாரியிடம் முறையிட்டேன். அவர்கள், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வருவாய் உதவி அலுவலர் அர்ஜுனன் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட அதிகாரி, மாற்று அலுவல் பணியில் உள்ளார். இன்று காலை நேரில் வர சொல்லியிருக்கிறேன். இருவரிடமும் விசாரித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us