ADDED : ஏப் 20, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், தமிழக டி.ஜி.பி., அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், 'அமைச்சர் பொன்முடி மீது பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு கண்டனம் எழுந்துவருகிறது.

