sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தலைமறைவு தம்பதி கைது

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தலைமறைவு தம்பதி கைது

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தலைமறைவு தம்பதி கைது

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தலைமறைவு தம்பதி கைது


ADDED : மே 21, 2025 12:41 AM

Google News

ADDED : மே 21, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி :அயப்பாக்கம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன், 44. சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். அப்போது, திருவேற்காடு, சின்னகோலடியை புருஷோத்தமன், 49, என்பவருடன் நட்பாக பழகியுள்ளார்.

மனைவி அனிதாவோடு, 45 சேர்ந்து நடத்திவரும் ஏலச்சீட்டில் சேரும்படி, சரவணனை, புருசோத்தமன் வற்புறுத்தி உள்ளார்.

அதன்படி, ஒரு லட்சம், 1.20 லட்சம் ரூபாய் என இரண்டு ஏலச்சீட்டிற்கு, மொத்தமாக, 97,808 ரூபாய் வரை, புருஷோத்தமன் வங்கி கணக்கிற்கு, சரவணன் அனுப்பியுள்ளார்.

கடந்தாண்டு ஜனவரியுடன் ஏலச்சீட்டு முடிந்த நிலையில், பணத்தை தராமல் மனைவியுடன் புருஷோத்தமன் தலைமறைவானார்.

ஏலச்சீட்டு நடத்துவதாக, பலரிடம் 15.86 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடியில் செய்துள்ளனர்.

இதுகுறித்து, ஆவடி மத்திய குறப்பிரிவு, சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்புபிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மோசடி தம்பதியை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாதவரம், அண்ணா தெருவில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமன், அனிதா இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us