/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி
ADDED : ஏப் 20, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், சென்னை பட்டரவாக்கம் மற்றும் அம்பத்துார் ரயில் நிலையத்திற்கு இடையே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் விரைவு ரயில் ஒன்று சென்ட்ரலில் இருந்து, வடமாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண் தவறி கீழே விழுந்துள்ளனர். அதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தோர், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், இறந்தவர்களின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

