UPDATED : செப் 06, 2026 03:53 PM
ADDED : செப் 06, 2026 03:53 PM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்த தமிழ்செல்வன், 51, ஞானசேகர், 28, இருவரும், கடந்த 4ம் தேதி இரவு, மேகசின் சாலை பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது, மர்ம நபர்கள், பீர் பாட்டிலால் தாக்கியதில் தமிழ்ச்செல்வன் மற்றும் ஞானசேகர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, வியாசர்பாடி போலீசார், தனுஷ்குமார், 20, கரண், 19, திருப்பதி, 20, ஆகியோரை ஏற்கனவே கைது செய்த நிலையில், ஞானசேகர், விஜய், 30, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
