/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புரட்டாசி முடிந்ததால் குவிந்தது கூட்டம் மீன் விலை இருமடங்கு உயர்வு
/
புரட்டாசி முடிந்ததால் குவிந்தது கூட்டம் மீன் விலை இருமடங்கு உயர்வு
புரட்டாசி முடிந்ததால் குவிந்தது கூட்டம் மீன் விலை இருமடங்கு உயர்வு
புரட்டாசி முடிந்ததால் குவிந்தது கூட்டம் மீன் விலை இருமடங்கு உயர்வு
ADDED : அக் 20, 2025 04:44 AM

காசிமேடு: புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் குவிந்ததால், மீன் விலை இருமடங்கு உயர்ந்தது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா கூட்டம் போல், மீன் வாங்க மக்கள் கூடுவது வழக்கம்.
இன்று தீபாவளி என்பதால், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற, 70க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. வாலை, முளியான், சங்கரா உள்ளிட்ட மீன் வகைகள் அதிகம் குவிந்தன.
மேலும், புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த மக்கள் கூட்டத்தால், மீன் விலை இரு மடங்கு உயர்ந்தது. இருந்தும் பொதுமக்கள் பேரம் பேசி, மீன் வகைகளை வாங்கி சென்றனர்.
தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ஜரூராக நடந்தது. அந்த வரிசையில், ஆடு - கோழி இறைச்சி விற்பனையும் களைகட்டியது.
ஆட்டிறைச்சி ரூ.1,200 சென்னையில் சில இடங்களில், ஆட்டிறைச்சி கிலோ அதிகரித்து, 1,000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு மண்ணீரல் வழக்கமாக, 150 - 170 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தவிர, முதல் தரம் கோழி இறைச்சி, 260 - 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி இன்று கொண்டாடப்பட்டாலும், அமாவசை தினம் என்பதால், நேற்றே, இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.