ADDED : அக் 21, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, :சென்னை, வியாசர்பாடி, பள்ளம் 1வது தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ், 34; 'டாடா ஏஸ்' லோடுவேன் டிரைவர்.
இவர், தன் வீட்டருகே நேற்று நடந்து சென்ற போது, அவ்வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், மொபைல்போனை கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, கத்தியால் இடது கையில் வெட்டினர்.
தேவராஜ் வலியால் கீழே குனிந்த நிலையில், கழுத்தில் இருந்த 4 சவரன் செயின், மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதைப் பார்த்த அங்கிருந்தோர், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

