/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்ச்சில் இருந்து திரும்பிய இரு வாலிபருக்கு வெட்டு
/
சர்ச்சில் இருந்து திரும்பிய இரு வாலிபருக்கு வெட்டு
சர்ச்சில் இருந்து திரும்பிய இரு வாலிபருக்கு வெட்டு
சர்ச்சில் இருந்து திரும்பிய இரு வாலிபருக்கு வெட்டு
ADDED : டிச 26, 2024 12:35 AM
செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வி.கே.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் நவின், 22. இவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு தேவராஜபுரம் சர்ச்சுக்கு சென்று பிராத்தனை முடித்தார். நேற்று அதிகாலை 2:45 மணிக்கு, தன் இருசக்கர வாகனத்தில், நண்பர் சச்சின் உடன் வீட்டிற்கு சென்றார்.
செல்லியம்மன் கோவில் தெருவில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த சுஜய், கிஷோர் குமார் உள்ளிட்ட 10 பேர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, நவினையும், அவரது நண்பரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
இதில், நவினின் தலை, முதுகு, வலது கை; சச்சினுக்கு மூக்கு, வாய் மற்றும் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், தொடர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்யூர் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த அக்டோபரில், தன் தங்கையை கிண்டல் செய்ததால், சுஜய், கிஷோர் குமார் ஆகிய இருவரையும், நண்பர்களுடன் சென்று சச்சின்தாக்கி உள்ளார்.
இது தொடர்பாக, சச்சின் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஜாமினில் வந்த அவர்கள், பழிவாங்கும் விதமாக, நவின், சச்சின் இருவரையும் வெட்டியது தெரிய வந்தது. செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய, 10 பேரை தேடி வருகின்றனர்.