/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் வெளியே தள்ளுவண்டி உணவகங்கள் குப்பையை சாலையில் கொட்டுவதால் அபாயம்
/
ஏர்போர்ட் வெளியே தள்ளுவண்டி உணவகங்கள் குப்பையை சாலையில் கொட்டுவதால் அபாயம்
ஏர்போர்ட் வெளியே தள்ளுவண்டி உணவகங்கள் குப்பையை சாலையில் கொட்டுவதால் அபாயம்
ஏர்போர்ட் வெளியே தள்ளுவண்டி உணவகங்கள் குப்பையை சாலையில் கொட்டுவதால் அபாயம்
ADDED : ஜூலை 14, 2025 02:32 AM

சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு வெளியே ஆக்கிரமித்து தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு வருவதால், அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக, விமான நிலைய வெளி வளாகங்களைச் சுற்றி பெரும்பாலும் எந்த கடைகளும் இருக்காது. அதிலும் இறைச்சி கடை போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள பி.வி.ஆர்., திரையரங்கம் பகுதியில், தள்ளுவண்டி கடைகள் அதிகம் முளைத்துள்ளன.
நடைபாதையை ஆக்கிரமித்து, சாலையை ஒட்டி இக்கடைகளை நடத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. தவிர, கடை உரிமையாளர்கள் முட்டை மற்றும் இறைச்சி கழிவுகளை சாலையிலேயே கொட்டி செல்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள சாலையில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவியுடன் சிலர், நடைபாதையை ஆக்கிரமித்து ஐந்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி உணவு கடைகளை நடத்தி வருகின்றனர். இதற்கு முறையான எந்த அனுமதியும் பெறவில்லை.
பல்லாவரம் மாநகராட்சி மற்றும் பல்லாவரம் போலீசாருக்கு 'கவனிப்பு' சரியாக செய்வதால், அவர்கள் இது குறித்து கண்டுகொள்வதில்லை. குறிப்பாக மாலை 6:00 மணிக்கு துவங்கி இரவு முழுதும் கடைகள் செயல்படுகின்றன.
வாகனங்களில் வருவோர், அங்கேயே அவற்றை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பொதுவாக உணவகங்களில் கழிவுகளை முறையாக பிரித்து குப்பையில் சேர்ப்பர். ஆனால் இங்கு செயல்படும் தள்ளுவண்டி கடைகள், முட்டை, இறைச்சி, மீதமான காய்கறி கழிவுகளை சாலையிலேயே போட்டு செல்கின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சாலையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.