/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
7 இடங்களில் ரூ.1 கோடியில் நிழற்குடை அமைக்க முடிவு
/
7 இடங்களில் ரூ.1 கோடியில் நிழற்குடை அமைக்க முடிவு
ADDED : ஜூலை 06, 2025 12:20 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், 1 கோடி ரூபாய் செலவில், ஏழு இடங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இதில், 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பேருந்து நிற்கும் இடங்களில், பொதுமக்களின் வசதிக்காக, பேருந்து நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மெப்ஸ் பேருந்து நிலையம் - தாம்பரம் மார்க்கம், கிஷ்கிந்தா சாலை - எம்.ஜி.ஆர்., சிலை அருகில், முடிச்சூர் சாலை - காமராஜர் நெடுஞ்சாலை சந்திப்பு, சமத்துவ பெரியார் சாலை - கிஷ்கிந்தா சாலை சந்திப்பு, இரும்புலியூர் நிறுத்தம் - பெருங்களத்துார் மார்க்கம், பீர்க்கன்காரணை நிறுத்தம் - செங்கல்பட்டு மார்க்கம், புதுபெருங்களத்துார் நிறுத்தம் - தாம்பரம் மார்க்கம் ஆகிய ஏழு இடங்களில், தலா 14.30 லட்சம் ரூபாய் செலவில், நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.