/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதி திராவிடர் நல துறை துணை செயலர் கோர்ட்டில் ஆஜர்
/
ஆதி திராவிடர் நல துறை துணை செயலர் கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஏப் 19, 2025 12:26 AM
சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த முத்துகுருசாமியும், செல்வராஜ் என்பவரும் இணைந்து, காகித விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் தெருவில், கட்டடத்துடன் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி, இருவர் பெயரிலும் பதிவு செய்தனர். கொரோனா தொற்று காரணமாக, 2021ல், செல்வராஜ் இறந்துவிட்டார்.
இதனால், இடத்தை சரி சமமாக பிரித்துக் கொள்வது, தொழிலை தொடர்ந்து நடத்துவது என, செல்வராஜ் மனைவி கிறிஸ்டினா மற்றும் அவர்களின் வாரிசுகள் ஒப்பந்தம் போட்டு உள்ளனர்.
இந்த நிலத்தை பிரித்துக்கொள்வதில், முத்துகுருசாமி, கிறிஸ்டினா தரப்பினர் இடையே பிரச்னை எழுந்துள்ளது. கட்டடத்தை இடிக்க, போலி கையெழுத்திட்டு கிறிஸ்டினா தரப்பினர் முயற்சி செய்துள்ளனர்.
இதற்கு, கிறிஸ்டினாவின் சகோதரியும், தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணைச்செயலர் எஸ்தர் ராணியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து, கிறிஸ்டினா, எஸ்தர்ராணி உள்ளிட்டோர் மீது, காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, சென்னை பரிமுனை பகுதியில் உள்ள, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எஸ்தர்ராணி நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

