/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்காக்கள் பராமரிப்பு பணி மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு
/
பூங்காக்கள் பராமரிப்பு பணி மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு
பூங்காக்கள் பராமரிப்பு பணி மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு
பூங்காக்கள் பராமரிப்பு பணி மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 05, 2024 12:25 AM

சென்னை,
சென்னையில் ஆறு பூங்காக்களை பராமரிக்கும் பொறுப்பை, மகளிர் சுய உதவிக் குழுவிடம் ஒப்படைப்பதற்கான, பணி ஆணையை, அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் முதல் முறையாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 51 பூங்காக்களை தேர்வு செய்து, அவற்றை பராமரிக்கும் பொறுப்பை, மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தது.
இதற்காக தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பூங்காக்கள் பராமரிப்பு முறைகள், நீர்நிலை மேலாண்மை, விளையாட்டு சாதனங்களை பராமரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் வழியே, 50 சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பங்கள் நேரடியாக பயனடைய உள்ளனர்.
இத்திட்டத்தை துவக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, ஆறு பூங்காக்களை பராமரிக்கும் பணிக்கான ஆணை மற்றும் உபகரணங்களை, நேற்று அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார், தமிழர் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திவ்யதர்சினி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

