sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

/

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : டிச 30, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வழக்கத்திற்கு மாறாக, நேற்று காலை 6:00 மணி முதலே, அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

குறிப்பாக, ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் முருகன் மலைக்கோவிலுக்கு வந்ததால் தேர்வீதியில் எங்கு பார்த்தாலும், செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் இருந்தனர்.

இதனால் பொது தரிசனத்தில் பக்தர்கள் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர். அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

இரவு, 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுவதால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கோவில் பேருந்து தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.

இதனால் பெரும்பாலான பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்றும், சில பக்தர்கள் ஆட்டோக்கள் வாயிலாகவும் சென்றனர்.






      Dinamalar
      Follow us