ADDED : அக் 25, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, அம்பேத்கர் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முகமது சபி, 23. இவர் மீது ஆறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் வீட்டில் துாங்கி கொண்டிருந்தவர் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
உடனடியாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது. புளியந்தோப்பு போலீசார் முதற்கட்ட விசாரணையில் முகமது சபி, சில நாட்களாக போதை ஊசி, போதை மாத்திரை மற்றும் மது வகைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததும், உணவு அருந்தாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.