sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு 18 மாதம் சிறை

/

ரயிலில் மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு 18 மாதம் சிறை

ரயிலில் மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு 18 மாதம் சிறை

ரயிலில் மயக்க மருந்து கொடுத்து நகை பறிப்பு திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு 18 மாதம் சிறை


ADDED : ஆக 26, 2025 12:19 AM

Google News

ADDED : ஆக 26, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, ரயில் பயணியரிடம் நகை மற்றும் பணம் அபகரித்த வழக்கில் கைதான நபருக்கு, 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பாகனுார் தோமையார்புரத்தைச் சேர்ந்தவர், முருகேஷ். துாத்துக்குடி கடலோர காவல்படையில் பணியாற்றிய இவர், கடந்த 2015ம் ஆண்டு, சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ராணுவ மருத்துவமனையில், உடற்தகுதி சான்றிதழ் பெறவந்திருந்தார்.

பின், கோவை செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சேர்ந்த ராஜா என்பவர், முருகேஷிடம் பேசியுள்ளார். பின், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் இடம் பிடித்து கொடுத்துள்ளார்.

இருவரும் அருகருகே அமர்ந்து பயணித்த நிலையில், நெருங்கி பழகிய ராஜா, முருகேஷுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

அந்த குளிர்பானத்தை குடித்த முருகேஷ் மயங்கிய நிலையில், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வெள்ளி கை செயின், மொபைல் போன் ஆகியவற்றை, ராஜா அபகரித்து சென்றார்.

இதேபோல மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் ரயில்வே போலீஸ் என அறிமுகமாகிய ராஜா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தங்க மோதிரம், 3,000 ஆயிரம் ரூபாயை அபகரித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர்.

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நடந்தது. போலீசார் தரப்பில், மாநகர முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது என கூறி, இரு வழக்குகளிலும் அவருக்கு தனித்தனியாக 18 மாதம் சிறை தண்டனை, மொத்தம் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us