sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டு: முறையாக துார்வார வேண்டுகோள்

/

விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டு: முறையாக துார்வார வேண்டுகோள்

விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டு: முறையாக துார்வார வேண்டுகோள்

விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டு: முறையாக துார்வார வேண்டுகோள்


ADDED : பிப் 23, 2024 12:23 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருகம்பாக்கம், விருகம்பாக்கம் கால்வாயில் உருவாகியுள்ள மண் திட்டுகளை அகற்றி, அதை முறையாக துார்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

சென்னை, வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றத்தில் விருகம்பாக்கம் கால்வாய் ஆரம்பமாகிறது. நெற்குன்றம், விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இந்த கால்வாயில் வெளியேறி வருகிறது.

இந்த கால்வாய் விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், மேத்தா நகர் வழியாக, நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றில் கலக்கிறது. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள இந்த கால்வாய், இந்நாள் வரை முறையாக அதன் உண்மையான ஆழத்திற்கு துார்வாரப்படவில்லை.

கடந்த மழைக்காலத்திற்கு முன், விருகம்பாக்கம் கால்வாயின் மேல் அடுக்கில் உள்ள குப்பைக் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டன. இதனால், 'மிக்ஜாம்' புயல் கன மழையில் கால்வாய் நிரம்பி வழிந்தது. இதன் விளைவாக விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் இருந்து தண்ணீர் வெளியேறாமல், நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

தற்போது, மழை முடிந்த நிலையில், மீண்டும் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பை மற்றும் கழிவுகள் நிறைந்தும், கால்வாயில் ஆங்காங்கே மண் திட்டுகள் உருவாகி உள்ளன. இவை, கால்வாய் நீரோட்டத்திற்கு தடையாக உள்ளன. எனவே, விருகம்பாக்கம் கால்வாயை அதன் உண்மையான ஆழத்திற்கு துார்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us