/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமண வரவேற்பில் தகராறு: 5 பேர் கைது
/
திருமண வரவேற்பில் தகராறு: 5 பேர் கைது
ADDED : ஆக 05, 2025 12:21 AM
புளியந்தோப்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தகராறில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான், 26. இவர், புளியந்தோப்பு நரசிம்மன் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நண்பரின் திருமணத்தில், நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார்.
அப்போது டி.ஜே., பாடல்களுக்கு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். இம்ரானும் நண்பர்களுடன் நடனமாடியுள்ளார். அப்போது அங்கிருந்த கும்பலுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மற்றொரு பிரிவினர் இம்ரானை சரமாரியாக தாக்கினர். சிறிது நேரத்தில் திருமண மண்டபம், கலவரமாக மாறியது.
காயமடைந்த இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, புளியந்தோப்பு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 25, சுகைல், 20, ஜாபர், 22, வெங்கடேஷ், 23, அஸ்மத் அலி, 26, என, ஐந்து பேரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.