/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூமி பூஜை முடிந்து 2 ஆண்டுகளாகியும் தரைப்பாலம் பணி துவக்காததால் அதிருப்தி
/
பூமி பூஜை முடிந்து 2 ஆண்டுகளாகியும் தரைப்பாலம் பணி துவக்காததால் அதிருப்தி
பூமி பூஜை முடிந்து 2 ஆண்டுகளாகியும் தரைப்பாலம் பணி துவக்காததால் அதிருப்தி
பூமி பூஜை முடிந்து 2 ஆண்டுகளாகியும் தரைப்பாலம் பணி துவக்காததால் அதிருப்தி
ADDED : மார் 06, 2024 12:28 AM

அரும்பாக்கம் முதல் பூமி பூஜை முடிந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும், கண்துடைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து, 1.03 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விட்டும், பணிகள் துவங்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது பூமி பூஜை நடத்தி, மீண்டும் தேர்தல் வாக்குறுதியாக சேர்க்க திட்டமிடப்படுவதால் மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டு, அரும்பாக்கத்தை அடுத்த சூளைமேடில், மாதா கோவில் தெருவில் உள்ளது.
இந்த தெருவைச் சுற்றி எம்.எச்., காலனி, கலெக்டர் காலனி உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில், 1,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள மாதா கோவில் தெரு மற்றும் அண்ணா நெடும்பாதையை இணைக்கும் பகுதியில் அரும்பாக்கம், அமைந்தகரை வழியாக செல்லும் விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயில், பொதுமக்கள் கடப்பதற்கு நான்கு அடி அகலம் கொண்ட தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் வசிப்போர் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை கடந்து, பெரியார் பாதை வழியாக சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனர்.
தகவல்
பாலம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், தற்போது சிதிலமடைந்து உள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையின் போது, தரைப்பாலத்தின் இருபுறங்களில் இருந்த பக்கவாட்டு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
பலகட்ட போராட்டத்திற்குப் பின், இங்கு, 1.03 கோடி ரூபாய் புதிய தரைப்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு, மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், மீண்டும் தேர்தல் வாக்குறுதியில் இந்த தரைப்பாலம் கட்டும் திட்டத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தரைப்பாலத்தின் அருகில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன், தரைப்பாலத்தில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த நிலையில், தற்போது பாலத்தின் கான்கிரீட் சேதமடைந்து, கூவத்தில் விழும் நிலையில் உள்ளது.
குறிப்பாக, அந்த பாலத்தின மீது இருசக்கர வாகனங்களில் செல்வோர், தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், இரவில் அவ்வழியே செல்பவர்கள், பீதியுடன் செல்கின்றனர்.
லோக்சபா தேர்தல்
ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் மட்டும், வேட்பாளர்கள் இங்கு புதிய பாலம் அமைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் செல்கின்றனர்.
தற்போது, லோக்சபா தேர்தலிலும் இதே வாக்குறுதி இருக்கும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய பாலம் அமைக்க 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், பூமி பூஜை மட்டும் போட்டது.
கடந்த ஆண்டு, மேயரும் இங்கு ஆய்வு செய்தார்.
அதன்பின், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மீண்டும் டெண்டர் விடப்பட்டு, பணிகள் நிலுவையில் உள்ளன. மீண்டும் ஒரு பூமி பூஜை போடப்படும் என்பது போல நிலைமை உள்ளது.
குறிப்பாக, இந்த பகுதியில் இறப்பவர்களின் உடலைக் கூட எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறோம். உடல்களை, எம்.எச்., காலனி அல்லது கலெக்டர் காலனி வரை சுற்றி எடுத்துச் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. பல ஆட்சிகள் மாறினாலும், எந்த பயனும் இல்லை.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. பணம் கிடைத்த உடன் பணிகள் துவங்கும் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து பாலத்தை இடித்து, ஆட்டோ ஒன்று செல்லும் அளவிற்காவது பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

