sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கேட்பாரற்ற வாகனங்களால் கீழ்ப்பாக்கத்தில் இடையூறு

/

கேட்பாரற்ற வாகனங்களால் கீழ்ப்பாக்கத்தில் இடையூறு

கேட்பாரற்ற வாகனங்களால் கீழ்ப்பாக்கத்தில் இடையூறு

கேட்பாரற்ற வாகனங்களால் கீழ்ப்பாக்கத்தில் இடையூறு


ADDED : பிப் 15, 2024 12:45 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கத்தில், கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னையில், சாலை மற்றும் தெருக்களில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், கேட்பாரற்று கிடக்கின்றன.

அவற்றை சமூக விரோத செயல்களுக்காக சிலர் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக, நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்ற, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த வகையில், சாலையோரங்களில் நீண்ட நாட்கள் இருந்த வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, அந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

அண்ணா நகர் மண்டலம், கீழ்ப்பாக்கம் கல்லறை சாலையோரத்தில், ஏராளமான வாகனங்கள் பல நாட்களாக, கேட்பாரற்று நிற்கின்றன.

அவற்றை அப்புறப்படுத்த போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

'இதுபோன்ற வாகனங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும்' என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us