sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்

/

வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்

வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்

வடிகால் மீது தி.மு.க., அலுவலகம் அகற்ற சென்ற அதிகாரிக்கு மிரட்டல்


ADDED : டிச 29, 2024 12:33 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகிநகர், கண்ணகி நகரில் வடிகாலை ஆக்கிரமித்து, தி.மு.க..வின் தென்சென்னை மாவட்ட பிரதிநிதி அருள், கட்சி அலுவலகம் கட்டினார். இதனால், அடைப்பு அகற்றம், சீரமைப்பு பணி செய்வதில் இடையூறு ஏற்பட்டது.

எனவே, கட்சி அலுவலகத்தை அகற்றக்கோரி, அப்பகுதிவாசிகள் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்தனர். நேற்று முன்தினம், வார்டு பொறியாளர் கலாவதி, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி ஆகியோர், ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர். அப்போது, தொண்டர்களுடன் வந்த அருள், கட்டடத்தை அகற்ற விடாமல் இடையூறு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கலாவதியின் மொபைல் போனை பறித்து, அவரை ஒருமையில் பேசி தள்ளி விட்டுள்ளார்.

இதில் கீழே விழுந்த கலாவதிக்கு, லேசான காயம் ஏற்பட்டது. திடீரென குவிந்த அருளின் ஆதரவாளர்கள், கலாவதியை சூழ்ந்து தாக்க முயன்றனர். உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, இடையில் புகுந்து பேசி கலாவதியை மீட்டார்.

தொடர்ந்து, 'அலுவலகத்தை இடித்தால் கொலை செய்துவிடுவேன்' என, மிரட்டல் விடுத்த அருள், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் சென்றார். கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us