sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் விற்ற டாக்டருக்கு 'காப்பு'

/

போதை பொருள் விற்ற டாக்டருக்கு 'காப்பு'

போதை பொருள் விற்ற டாக்டருக்கு 'காப்பு'

போதை பொருள் விற்ற டாக்டருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 11, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்ற வழக்கில், தனியார் காப்பீடு நிறுவன டாக்டர் கைது செய்யப்பட்டார்.

அரும்பாக்கம் வல்லவன் ஹோட்டல் அருகே, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்ற, சென்னையைச் சேர்ந்த அந்தோணி ரூபன், 29, தீபக்ராஜ், 25, ஆகிய இருவரையும், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், ஜூன் 30ம் தேதி கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து, 14 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்தனர். இவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில், மெத் ஆம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த, விருகம்பாக்கம் சின்மயா நகரைச் சேர்ந்த டாக்டர் ஈஸ்வர், 27, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இவர், ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தற்போது, சென்னையில் உள்ள தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us