sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பன்றிக்கு வைத்த வெடியில் வளர்ப்பு நாய் சிக்கி பலி

/

பன்றிக்கு வைத்த வெடியில் வளர்ப்பு நாய் சிக்கி பலி

பன்றிக்கு வைத்த வெடியில் வளர்ப்பு நாய் சிக்கி பலி

பன்றிக்கு வைத்த வெடியில் வளர்ப்பு நாய் சிக்கி பலி


ADDED : ஜன 07, 2025 12:20 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே உள்ளது போந்தவாக்கம் கிராமம். அங்கு, புனித அன்னாள் சர்ச்சிற்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் உள்ளது.

அந்த நிலத்தில், தர்ப்பூசணி வைப்பதற்காக அரசு பள்ளி ஆசிரியர் அன்பழகன் என்பவர், குத்தகைக்கு நிலத்தை வாங்கி சுத்தம் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் காவலாளியாக, பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த சீனய்யா, 60, என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த நிலத்தில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த கேசவன், 28, என்பவரது நாய் கடித்துள்ளது. அப்போது, நாயின் தலை சிதறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பாதிரிவேடு போலீசாரின் விசாரணையில், பன்றி இறைச்சிக்காக காவலாளி சீனய்யா நிலத்தில் வெடி மருந்து வைத்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us