sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு

/

சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு

சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு

சென்னையில் மீண்டும் 'டபுள்டக்கர்' பஸ்கள்: இரு மாதங்களில் இயக்க முடிவு


UPDATED : நவ 21, 2025 07:48 AM

ADDED : நவ 21, 2025 05:37 AM

Google News

UPDATED : நவ 21, 2025 07:48 AM ADDED : நவ 21, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் மீண்டும், 'டபுள்டக்கர்' பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இரண்டு மாதங்களில் அவற்றின் சேவை துவங்கும் என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில், 20 ஆண்டுகளுக்கு முன், டபுள்டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரே நேரத்தில் அதிக பேர் பயணம் செய்வதோடு, மாநகரங்களின் உயரமான கட்டடங்களின் அழகையும் ரசிக்க முடியும்.

சென்னையில், தாம்பரம் - பிராட்வே 18ஏ வழித்தடத்தில், அதிக பேருந்துகள் இயக்கப்பட்டன. மேம்பாலங்கள் அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், இந்த பேருந்துகளின் சேவை, 2008ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, டிரெய்லர் பேருந்துகள் தனியார் நிறுவனம் சார்பில், சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, புதிய டபுள்டக்டர் பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் டபுள்டக்கர் பேருந்து சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளது. அடுத்தடுத்து வரும் மின்சார பேருந்துகள் இயக்கத்தில், 20 டபுள்டக்கர் பேருந்துகளையும் இணைத்துள்ளோம்.

எனவே, இரண்டு மாதங்களில் டபுள்டக்கர் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us