sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரியில் இருந்து விழுந்த ஓட்டுனர் சக்கரத்தில் சிக்கி பலி

/

லாரியில் இருந்து விழுந்த ஓட்டுனர் சக்கரத்தில் சிக்கி பலி

லாரியில் இருந்து விழுந்த ஓட்டுனர் சக்கரத்தில் சிக்கி பலி

லாரியில் இருந்து விழுந்த ஓட்டுனர் சக்கரத்தில் சிக்கி பலி


ADDED : பிப் 23, 2025 09:22 PM

Google News

ADDED : பிப் 23, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:கடலுார் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 54; கன்டெய்னர் லாரி ஓட்டுனர். நேற்று காலை, எண்ணுாரில் இருந்து, மாதவரம் நோக்கி, கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார்.

மணலி விரைவு சாலை, பகிங்ஹாம் கால்வாய் அருகே சென்று கொண்டிருந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரியில் உரசி விபத்துக்குள்ளானது.

பின், தறிக்கெட்டு ஓடிய கன்டெய்னர் லாரியில் இருந்து ஓட்டுனர், தவறி கீழே விழுந்தார். அவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி, ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, சாலையோர கம்பம் ஒன்றில் மோதி நின்றது.

தகவலறிந்த, சாத்தாங்காடு போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனை அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us