sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி

/

போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி

போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி

போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி


ADDED : ஏப் 28, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு:பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமியை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் குமார், 30. இவர், கோயம்பேடு பேருந்த நிலைய காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில் போலீஸ்காரராக பணி செய்து வருகிறார்.

நேற்று அதிகாலை கோயம்பேடு 100 அடி சாலையில், ஏ.வி.ஏ., டீ கடை அருகே மது போதையில் நின்றவரிடம், இங்கு ஏன் நிற்கிறீர்கள் என்று விசாரித்தார்.

அப்போது, முன்னுக்கு பின் முரணாக பேசிய நபர், காவலரிடம் வாக்குவாதம் செய்தார். அசிங்கமாக பேசி கையால் தாக்கினார். இதில், வினோத்தின் போலீஸ் சீருடை கிழிந்தது.

தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அருண் பிரபு, 24 என்பதும், பூந்தமல்லியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us