/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு
/
ஆவடி அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு
ADDED : பிப் 04, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த அண்ணனுார் ரயில் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், தண்டவாளத்தை கடக்கும்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.
இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.