ADDED : டிச 20, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்,
மறைமலை நகர் அடுத்த தைலாவரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 62. கோனாதி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை பணிக்குச் செல்ல, தன் 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.' ஸ்கூட்டரில், தைலாவரம் சிக்னலில் சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது இவர் மீது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற விழுப்புரம் கோட்ட தடம் எண்.148 அரசு பேருந்து மோதியது.
இதில், கிருஷ்ணன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவஇடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.