ADDED : ஏப் 03, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார், மேற்கு தாம்பரம், டி.டி.கே., நகரை சேர்ந்தவர் கணேசன், 70. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். நேற்று காலை, வழக்கம் போல் பெருங்களத்துார் மேம்பாலத்தில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது, மேம்பால இறக்கத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடன் நடைபயிற்சி சென்றோர், கணேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கிருந்து, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.