sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 15 ஆண்டு சிறை

/

 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 15 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 15 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 15 ஆண்டு சிறை


ADDED : நவ 19, 2025 04:10 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மயிலாப்பூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 60 வயது முதியவருக்கு 15 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மயிலாப்பூர் பகுதியில், நேபாள நாட்டை சேர்ந்த தம்பதி, தங்களின் ஆறு வயது மகளுடன் சாலையோரம் வசித்து வந்தனர். கடந்த மார்ச்சில், மயிலாப்பூரைச் சேர்ந்த செய்யது சாலி பிரான், 60, என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செய்யது சாலி பிரானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், செய்யது சாலி பிரான் மீதான குற்றச்சாட்டு, அரசு தரப்பால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி, அவருக்கு 15 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு, இழப்பீடாக 1.5 லட்சம் ரூபாய் வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us