/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை கொன்ற வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை
/
பெண்ணை கொன்ற வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 10, 2025 12:28 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 44. இவரது மனைவி சுகன்யா, 38.
வெங்கடேசன் மலேஷியாவில் தங்கி வேலை செய்த நிலையில், சுகன்யா புதுப்பாக்கத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தினார்.
பக்கத்தில் கடை வைத்திருந்த குமார், 56, என்பவர், சுகன்யாவிற்கு அவ்வப்போது உதவி செய்து வந்தார். இதை, மற்ற கடைக்காரர்கள் தவறாக பேசியதால், குமாரிடம் பேசுவதை சுகன்யா நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குமார், 2022ம் ஆண்டு, சுகன்யாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். கேளம்பாக்கம் போலீசார், குமாரை கைது செய்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குமாருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.