sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகர பேருந்து மோதி பிராட்வேயில் மூதாட்டி பலி

/

மாநகர பேருந்து மோதி பிராட்வேயில் மூதாட்டி பலி

மாநகர பேருந்து மோதி பிராட்வேயில் மூதாட்டி பலி

மாநகர பேருந்து மோதி பிராட்வேயில் மூதாட்டி பலி


ADDED : ஏப் 04, 2025 12:15 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்வே, துரைப்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள், 50. இவரது பேத்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பேத்திக்கு உணவு கொடுக்க வந்த மூதாட்டி, மாநகர பேருந்து வாயிலாக வீட்டிற்கு செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவு, பிராட்வே பேருந்து நிலையம் வந்துள்ளார்.

பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற போது, திருவேற்காடு செல்லும் தடம் எண்: எம் - 50 என்ற மாநகர பேருந்தின் பக்கவாட்டு பகுதி, மூதாட்டி மீது உரசியது.

இதில் நிலைதடுமாறி விழுந்த அவர் மீது, அதே மாநகர பேருந்தின் முன்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநரான, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தணிகைவேல், 41, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us