/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரை - தாம்பரம் தடத்தில் நாளை மின்சார ரயில்கள் ரத்து
/
கடற்கரை - தாம்பரம் தடத்தில் நாளை மின்சார ரயில்கள் ரத்து
கடற்கரை - தாம்பரம் தடத்தில் நாளை மின்சார ரயில்கள் ரத்து
கடற்கரை - தாம்பரம் தடத்தில் நாளை மின்சார ரயில்கள் ரத்து
ADDED : நவ 16, 2024 12:34 AM
சென்னை, சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் நாளை காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், 34 மின்சார சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன.
சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாம்பரம் ரயில் பணிமனையில் நாளை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால், கடற்கரை - தாம்பரத்தில், காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருமார்க்கத்திலும், வழக்கமான செல்லும், 60க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இருப்பினும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஓடும்.
மேலும், பயணியரின் வசதிக்காக கடற்கரை - - பல்லாவரம் இடையே, 45 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து முதல் சிறப்பு ரயில் காலை 6:15 மணிக்கும், பல்லவாவரத்தில் இருந்து முதல் சிறப்பு ரயில் காலை 7:10 மணிக்கும் இயக்கப்பட உள்ளன.
இரு மார்க்கத்திலும், 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மாலை 5:00 மணிக்கு பிறகு, ஞாயிறு காலஅட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணியர் நலன் கருதி கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கும்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பயணியர் சரியான திட்டமிடலுடன், சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.