/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : நவ 01, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: காஞ்சிபுரம் அருகே தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 56. இவர், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார். சக தொழிலாளர்கள், அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சொக்கலிங்கம் இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

