sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் டாக்டரிடம் மோசடி மின்வாரிய ஆய்வாளர் கைது

/

பெண் டாக்டரிடம் மோசடி மின்வாரிய ஆய்வாளர் கைது

பெண் டாக்டரிடம் மோசடி மின்வாரிய ஆய்வாளர் கைது

பெண் டாக்டரிடம் மோசடி மின்வாரிய ஆய்வாளர் கைது


ADDED : ஏப் 10, 2025 11:52 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சேப்பாக்கம், சைடோஜி தெருவைச் சேர்ந்தவர் கவுரி, 75. டாக்டர். அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு சோழிங்கநல்லுார் கிராமத்தில், 4,700 சதுரடி, 4,527 சதுரடி என இரண்டு நிலங்கள் உள்ளன. அடையாறை சேர்ந்த சங்கர் என்பவர், நிலத்திற்கான பவர் பெற்றுக் கொண்டு, போலியாக தன்னுடைய கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்து விற்றுள்ளார்.

எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அடையாறு கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்தவர் சங்கர், 51. அவர் ஆதரவு இன்றி தனியே வசித்து வந்த டாக்டர் கவுரிக்கு, மருத்துவமனை கட்டி தருவதாக கூறி, 2.22 கோடி ரூபாயும், 26 சவரன் நகையும், பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். மேலும் கவுரிக்கு சொந்தமான நிலத்தை போலியான ஆவணங்கள் வாயிலாக அபகரித்து, அவரது மனைவியின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

விசாரணையில் இது தெரியவந்ததை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாறன் தலைமையிலான தனிப்படையினர், மோசடியில் ஈடுபட்ட மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் சங்கரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us