ADDED : நவ 21, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தரமணி, சி.எஸ். ஐ.ஆர்., சாலையில், 110 கிலோ வோல்ட் திறனில் டைடல் பார்க் துணைமின் நிலையம் உள்ளது.
இதன் வளாகத்தில் உள்ள ஐ.டி., காரிடார் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், தரமணி, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன் பெறலாம்.