/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜன 23, 2025 12:21 AM
சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மையங்கள் இணைந்து, கிண்டியில் நாளை காலை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றன.
சென்னையில் உள்ள, அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை நடத்துகிறது. முகாம், கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10:00 முதல் 2:00 மணி வரை நடக்கிறது.
எட்டாம் வகுப்பு முதல் அனைத்து கல்வி தகுதியுடையவர்களும் பங்கேற்கலாம். முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.
பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில், பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

