/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 26, 2025 12:09 AM
சென்னை, கிண்டியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை நடக்கிறது.
சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, நாளை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இந்த முகாம் கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், 8 ம் வகுப்பு முதல், அனைத்து கல்வித்தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம். முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.