sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஐந்து பேராசிரியர்களின் விளக்கம்: பல்கலை 'சிண்டிகேட்'டில் சமர்ப்பிப்பு

/

 ஐந்து பேராசிரியர்களின் விளக்கம்: பல்கலை 'சிண்டிகேட்'டில் சமர்ப்பிப்பு

 ஐந்து பேராசிரியர்களின் விளக்கம்: பல்கலை 'சிண்டிகேட்'டில் சமர்ப்பிப்பு

 ஐந்து பேராசிரியர்களின் விளக்கம்: பல்கலை 'சிண்டிகேட்'டில் சமர்ப்பிப்பு


ADDED : டிச 23, 2025 04:59 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பல்கலையில், 2018ம் ஆண்டு, தமிழ், கன்னடம், ஹிந்தி, இந்திய வரலாறு, சைவ சித்தாந்தம், உயிரி தொழில்நுட்பம், மருத்துவ உயிரி வேதியியல் உட்பட பல்வேறு துறைகளில், 22 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நியமனத்தில், யு.ஜி.சி., எனும், பல்கலை மானியக்குழு விதிகள், இடஒதுக்கீடு, ஏ.பி.ஐ., மதிப்பெண் இல்லாதது உட்பட பல்வேறு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நியமனத்தை எதிர்த்து, சென்னை பல்கலை முன்னாள் பேராசிரியர் ரஹ்மத்துல்லா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

புகாரின் மீது சென்னை பல்கலை, உரிய விசாரணை நடத்த வேண்டும்; தவறு நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால், பேராசிரியர்கள் மீது ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எ ன, நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, மூன்று பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த மே 14ம் தேதி, தங்களின் விசாரணை அறிக்கையை, சீலிடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, பேராசிரியர்கள் எஸ்.எஸ்.சுந்தரம், மணிவாசகம், சரவணன், சுமதி, பூவரஹமூர்த்தி ஆகிய ஐந்து பேரிடம் விளக்கம் கேட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஐந்து பேராசி ரியர்களும், பணி நியமனம் தொடர்பான விளக்கங்களை சமர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்களின் விளக்கங்கள் பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பணி நியமனத்தின்போது, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் இந்த குழு பரிசீலனை செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us