sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது

/

வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது

வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது

வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது


ADDED : மார் 26, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 26, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி, வடபழனி சைதாப்பேட்டை சாலையை சேர்ந்தவர் சசிகலா, 50. இவரது கணவர் கணேசன் உடல் நலக்குறைவால், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி சசிகலா வீட்டிற்கு, சாமியார் என்ற போர்வையில் ஒருவர் வந்தார்.

'கணேசன் உடல் நிலை சரியாக பூஜை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் இறந்து விடுவார்' என, பயமுறுத்தி உள்ளார்.

பயந்து போன சசிகலா, பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அத்துடன், போலி சாமியார் கூறியபடி, 3.5 சவரன் நகைகளை வைத்து பூஜை செய்தார்.

பூஜை முடிந்த பின், பூஜை பொருட்களை பூஜை அறை மற்றும் கணவர் படுக்கை அருகே வைத்தார்.

திரும்பி வந்து பார்த்தபோது, பூஜைக்கு வைத்திருந்த, 3.5 சவரன் நகைகளுடன், போலி சாமியார் தப்பியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரில், வடபழனி போலீசார் வழக்கு பதிந்து, நகையை திருடி சென்றது, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த மணிகண்டன், 25 என தெரியவந்தது.

அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3.5 சவரன் நகையை பறிமுல் செய்தனர்.

***






      Dinamalar
      Follow us