sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஒயர் விற்றோர் கைது

/

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஒயர் விற்றோர் கைது

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஒயர் விற்றோர் கைது

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஒயர் விற்றோர் கைது


ADDED : ஜூலை 08, 2025 12:46 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஜூலை 8-

பிரபல நிறுவனங்களின் பெயர்களில், போலி எலக்ட்ரிக் பொருட்கள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புல்சிங், 26, பகவத் சிங், 22, பரூக்கான், 23. இவர்கள் 'பாலிகேப்' என்ற முன்னணி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, போலியான ஒயர்களை விற்பனை செய்துள்ளனர்.

இவர்களை, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். இவர்கள் டில்லியில் இருந்து, போலி ஒயர்களை வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து, 96,500 ரூபாய் மதிப்பிலான போலி ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக்குமார், 48. இவர், ஹரியானாவில் இருந்து 'வோல்டேஜ் ரெகுலேட்டர்' வாங்கி வந்து, அது 'கிர்லோஸ்கர்' நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது என, ஸ்டிக்கர் ஒட்டி, சவுகார்பேட்டை பகுதியில் விற்று வந்துள்ளார்.

இவரையும் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து, 52,200 ரூபாய் மதிப்பிலான போலி வோல்டேஜ் ரெகுலேட்டர் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us