/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுதல் சாம்பாருக்காக கொலை பம்மலில் தந்தை, மகன் கைது
/
கூடுதல் சாம்பாருக்காக கொலை பம்மலில் தந்தை, மகன் கைது
கூடுதல் சாம்பாருக்காக கொலை பம்மலில் தந்தை, மகன் கைது
கூடுதல் சாம்பாருக்காக கொலை பம்மலில் தந்தை, மகன் கைது
ADDED : மார் 14, 2024 12:20 AM

பம்மல், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அருண், 30. பம்மலில் தங்கி, பல்லாவரம் - குன்றத்துார் சாலையில் உள்ள 'ஏ2பி' ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.
அனகாபுத்துார், பாரி நகரைச் சேர்ந்த பெயிண்டரான சங்கர், 55, அவரது மகன் அருண்குமார், 30, ஆகியோர், இட்லி வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு, இந்த ஹோட்டலில் வந்தனர்.
'பார்சல்' பொட்டலத்தை அவர்களிடம் கொடுத்தபோது, கூடுதல் சாம்பார் கேட்டுள்ளனர். அதற்கு, அருண்குமார் மறுக்கவே, ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின், வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்கள் வாகனத்தை எடுத்தபோது, அங்கிருந்த காவலாளி மதன்குமாரிடமும் இருவரும் தகராறு செய்து, அவரை அடித்துள்ளனர்.
இதை தட்டி கேட்ட மேற்பார்வையாளர் அருணை, தந்தையும், மகனும் கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தலையில் பலமாக அடித்ததால், அருண்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அருணை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், வழியிலேயே அருண்குமார் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார், ஹோட்டல் மேற்பார்வையாளரை தாக்கிய தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர்.
இறந்த அருணுக்கு, சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே கொலை வழக்காக மாற்றப்படுமா, இல்லை என்பது முடிவு செய்யப்படும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

