/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி உதவி சக ஓட்டுநர்கள் நிதி திரட்டி வழங்கினர்
/
உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி உதவி சக ஓட்டுநர்கள் நிதி திரட்டி வழங்கினர்
உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி உதவி சக ஓட்டுநர்கள் நிதி திரட்டி வழங்கினர்
உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி உதவி சக ஓட்டுநர்கள் நிதி திரட்டி வழங்கினர்
ADDED : ஜூன் 29, 2025 12:16 AM

ராயபுரம், சாலை விபத்துகளில் உயிரிழந்த 26 கன்டெய்னர் லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு, சக ஓட்டுநர்கள் ஒரு கோடி ரூபாய் வரை நிதி திரட்டி வழங்கியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை துறைமுகத்தில் சி.சி.டி.எல்., - சி.ஐ.டி.பி.எல்., என்ற தனியார் சரக்கு பெட்டக முனையங்களும், எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் தனியார் நிர்வகிக்கும் கன்டெய்னர் முனையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த துறைமுகங்களில், 3,500க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், சாலை விபத்துகள் மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 26 கன்டெய்னர் லாரி ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு, 'வாட்ஸாப்' மூலம் நிதி திரட்டி, சக ஓட்டுநர்கள் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வழங்கி உள்ளனர்.
கடந்த மே மாதத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் என, 20 லட்சம் ரூபாய் நேரில் வழங்கினர்.
இதுகுறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சென்னை துறைமுக டிரைலர் மற்றும் டாரஸ் ஓட்டுநர் நலச்சங்க துணைத் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
கடந்த மே மாதத்தில், துாத்துக்குடியைச் சேர்ந்த ரவிச்செல்வம், வத்தலகுண்டைச் சேர்ந்த சதீஷ்குமார், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த மணி, விருத்தாசலத்தைச் சேர்ந்த சாகுல் அமீது ஆகிய நான்கு கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தால் உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் என, 20 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளோம். கடந்த 2018ம் ஆண்டு முதல் இப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.
இதுவரை 26 பேருக்கு ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளோம். உயிரிழந்தவர்களின் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணம் டெபாசிட் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.