sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சக லாரி ஓட்டுநர்கள் நிதியுதவி

/

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சக லாரி ஓட்டுநர்கள் நிதியுதவி

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சக லாரி ஓட்டுநர்கள் நிதியுதவி

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சக லாரி ஓட்டுநர்கள் நிதியுதவி


ADDED : அக் 13, 2025 05:09 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்: சென்னை துறைமுகத்தில் சி.சி.டி.எல்., - சி.ஐ.டி.பி.எல்., என்ற தனியார் சரக்கு பெட்டக முனையங்களும், எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் தனியார் நிர்வகிக்கும் கன்டெய்னர் முனையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த துறைமுகங்களில், 5,000க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் உயிரிழந்த ஆறு ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி, 26 லட்ச ரூபாய் நிதி வழங்கி உள்ளனர்.

இது குறித்து சென்னை துறைமுக டிரைலர் மற்றும் டாரஸ் ஓட்டுநர் நலச்சங்க துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:

கடந்த மூன்று மாதங்களில், திருநெல்வேலியை சேர்ந்த ராஜகோபால், பெரம்பலுாரைச் சேர்ந்த சுப்ரமணி, சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்த சுப்பையா; காசிமேடைச் சேர்ந்த விஜயகுமார், கள்ளகுறிச்சியைச் சேர்ந்த வெற்றிவேல், அரக்கோணத்தைச் சேர்ந்த ராமன் ஆகிய ஓட்டுநர்கள் உடல்நலக் குறைவு மற்றும் விபத்தால் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பத்திற்காக, ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை, நிதி உதவி அளித்தனர்.

அந்தவகையில், 26 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது. அதை, ஆறு பேரின் குடும்பங்களுக்கு, தலா 4.50 லட்ச ரூபாய் என, வழங்கி உள்ளோம். இதுவரை 35க்கும் மேற்பட்டோருக்கு, ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வரை வசூல் செய்து கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us