/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டயர் தொழிற்சாலையில் தீ ரூ.50 லட்சம் பொருள் நாசம்
/
டயர் தொழிற்சாலையில் தீ ரூ.50 லட்சம் பொருள் நாசம்
ADDED : ஜூலை 19, 2025 12:25 AM

கும்மிடிப்பூண்டி, டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை ஒட்டி, புதுப்பேட்டை கிராம எல்லைக்கு உட்பட்ட இடத்தில், 'சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ்' என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு, வெளிநாடுகளில் இருந்து பழைய டயர்கள் இறக்குமதி செய்து, மறுசுழற்சி செய்யப்படுகின்றன. நேற்று அதிகாலை, தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிடங்கில் மின் கசிவு ஏற்பட்டு, டயர் கழிவுகளில் தீப்பற்றியது.
நேற்று அதிகாலை மழை பெய்தபோதிலும், கட்டுக்கடங்காமல் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
கும்மிடிப்பூண்டி சிப்காட், கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அதிகாலை 2:30 - மதியம் 12:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டயர் கழிவுகள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.